கிழக்கு மாகாண சதுரங்க போட்டி: மட்டக்களப்பு மாவட்ட ஆண், பெண் அணிகள் வெற்றி

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், மட்டக்களப்பில் நடாத்திய சதுரங்கம் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில், மட்டக்களப்பு மாவட்ட ஆண், பெண் அணிகள் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இச்சுற்றுப் போட்டியில், ஆண்கள் பிரிவில், இரண்டாமிடத்தை அம்பாறை மாவட்டமும், பெண்கள் பிரிவில் இடண்டாமிடத்தை, திருகோணமலை மாவட்டமும் பெற்றுக் கொண்டுள்ளன.

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவையொட்டி, கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸின் வழிகாட்டலில் நடாத்தப்பட்ட சதுரங்கம் சுற்றுப் போட்டியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட ஆண், பெண் அணிகள் பங்குபற்றின. மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியில், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள பயிற்றுவிப்பாளர் ஏ.டபிள்யூ.எம்.பாஸித், சிரேஷ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எச்.விமலசேன, அட்டாளைச்சேனை விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் உள்ளிட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இறுதி முடிவு வருமாறு

ஆண்கள் பிரிவு

முதலாமிடம் -

மட்டக்களப்பு மாவட்டம்

இரண்டாமிடம் -

அம்பாறை மாவட்டம்

பெண்கள் பிரிவு

முதலாமிடம் -

மட்டக்களப்பு மாவட்டம்

இரண்டாமிடம் -

திருகோணமலை மாவட்டம்

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை