ஜனாதிபதியின் சுதந்திர தின உரைக்கு சகல மக்களும் பாராட்டு

நாட்டின் 72ஆவது சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆற்றிய உரை அனைவரதும் பாராட்டைப் பெற்றுள்ளதில் எவ்வித சந்தேகமும் இல்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இவ்வுரை தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய சுதந்திர தின உரையில் மக்களின் சுதந்திரத்தை வலுப்படுத்தல், சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்தல், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் தான் தலைவராக அறிவித்தமை, மதத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை உறுதியளித்தமை என்பன சகலரதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. இவ்வுரையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த அவரது கொள்கைகளும் சகலரையும் ஈர்த்திருக்கும் என்பது உறுதி.

எவரும் தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்றும் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தும் மற்றும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்தை ஜனாதிபதி தனது உரையின்போது வெளிப்படுத்தியிருந்தமை அனைவரினதும் வரவேற்பினை சந்தேகமின்றி பெற்றுள்ளது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து உணவில் தன்னிறைவடைதல், வறுமை, வேலையில்லாமை ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல், இன, மத, வேறுபாடுகளைக் களையும் அவரது தெளிவான சிந்தனைகளும் ஜனாதிபதியின் சுதந்திர தின உரையில் வௌிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முன்னேற்றத்தை செம்மையாக நெறிப்படுத்தும் துணிச்சலான தலைமை எமது நாட்டுக்கு கிடைத்துள் ளமை, அவரது உரையில் தென்பட்டதாகவும் முன்னாள் எம்.பி சுஹைர் தெரிவித்துள்ளார்.

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை