துருக்கி விமான விபத்தில் மூவர் பலி

துருக்கியின் ஸ்தான்பூல் விமானநிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஒடுபாதையை விட்டு விலகி, சறுக்கி மூன்று துண்டாக உடைந்த விபத்தில் மூவர் உயிரிழந்து, 170 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்மிர் மாகாணத்தில் இருந்து 171 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களுடன் வந்த பெகாசுஸ் ஏர்லைன்ஸ் விமானமே கடந்த புதன்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடும் காற்று மற்றும் மழைக்கு மத்தியிலேயே போயிங் 737 விமானம் தரையிறங்க முயன்றுள்ளது. விமானம் ஓடுபாதையை விட்டு 30 தொடக்கம் 40 மீற்றருக்கு அப்பால் விழுந்தபடி தரையிறங்கி இருப்பதாக ஸ்தான்பூல் ஆளுநர் அல் யெர்லிகாயா குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது விமானத்தின் உட்பகுதியில் தீப்பிடித்துள்ளது. இதனால் பயணிகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை