அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக முறிவு வைத்திய சேவையை இன,மத பேதமின்றி அர்ப்பணிப்புடன் செய்துவந்த பேச்சி முத்து முறிவு வைத்தியரின் சேவை நலனைப் பாராட்டி கிண்ணியா சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் நேற்று முன்தினம் (23 ) அவரது இல்லத்திற்கு சென்று பாராட்டு நிகழ்வை நடாத்தியது.
சங்கத்தின் உறுப்பினர்கள், அபிமானிகள், வைத்தியரின் குடும்பத்தினர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், பொன்னாடை போர்த்தி" மருத்துவ முத்து" என்ற பட்டமும் வழங்கி பொற் கிழியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியவர்களுக்கும், நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அவரது குடும்பத்தினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை பிரஜை குழுவினர் தெரிவித்தனர்.
திருமலை மாவட்ட விசேட நிருபர்
Wed, 02/26/2020 - 06:00
from tkn