மட்டக்களப்பு தமிழ்ச் சங்க கட்டட திறப்பு விழா இன்று

மட்டக்களப்பு திருமலை வீதி, பிள்ளையாரடியில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கக் கட்டடத் திறப்பு விழா இன்று சனிக்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்றது.

இந்நிகழ்வு மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெறுகின்றது. இப்பெருவிழாவில் முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி. சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஏனைய அதிதிகளான தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி, சங்கப் பொருளாளரும் கட்டடக் குழுத் தலைவருமான தேசபந்து மு. செல்வராஜா ஆகியோரும் இணைந்து கட்டடத்தை திறந்து வைக்கின்றார்கள். புரவிப் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பேரணி புறப்பட்டு தமிழ்ச் சங்க கட்டட வாசலில் வரவேற்பு உபசாரங்கள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து கட்டட நிர்மாண கொடையாளிகளின் நாமம் பொறித்த நினைவுப் படிகம் திரை நீக்கம் செய்யப்படும்.

 

Sat, 02/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை