இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தமது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விதித்துள்ள தடைக்கு ஐ.தே.கட்சி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐ.தே.க தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்படி விவகாரம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கண்டனம் தெரிவித்துள்ளதாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.இராணுவ தளபதிக்கு இத்தடை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்காகவே விதிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புக்கு தனது முழு கட்சியுமே கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Mon, 02/17/2020 - 06:00
from tkn