பொறுமை, சமாதானத்தை மதிக்கும் அபிமானமுள்ள மக்களாக ஒன்றுபடுவோம்

இலங்கை மக்கள் இன, மத பேதங்களை மறந்து ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடன் கௌரவமாகவும், நம்பிக்கையுடனும் செயற்படுவது அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மகா சிவராத்தி தினத்தையொட்டி விடுத்திருக்கும் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

உலகெங்கும் வாழும் சைவ மக்கள் சிவபெருமானுக்காக விரதமிருந்து சமய வழிபாடுகளில் ஈடுபடும் இன்றைய மகா சிவராத்திரி தினத்திற்காக எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். சைவ சமய மக்களின் வணக்க வழிபாட்டைக் கொண்ட முக்கிய தினமாக பக்திபூர்வமாக அனுஷ்டிக்கின்றனர். இன்றைய தினத்தில் விழித்திருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு விரதமிருந்து சைவ மக்கள் இறைவனின் அருளோடு தமது வாழ்க்கையை ஒளிபெறச் செய்துகொள்கின்றனர். இலங்கை அமைதியான பல்லின சமூகங்கள் வாழும் நாடாகும். அதனால் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்ற அவர்களுக்கு உரிமையும் சுதந்திரமும் கொண்ட நாடாகும். 

 

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை