மலையக சிங்கங்கள் மீண்டும் ஒரு சாதனை

நேபாள தலைநகர் காத்மண்டுவில் கடந்த மாதம் 28.01.2020 முதல் 31.01.2020 நடைபெற்ற ஹட்டியா பட்டியா போட்டிகள் நடைபெற்றன. இந்தியா, இலங்கை உட்பட 06 ஆசிய நாடுகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இலங்கை மலையகத்தை சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று நாடு திரும்பி உள்ளது.

அணி பிரிவுகளாக போட்டிகள் நடாத்தப்பட்ட இந்த போட்டியில். ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கு இடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை மலையக அணி வீரர்கள் வெற்றி பெற்றமை ஒரு சிறப்பு அம்சமாகும். ஆடவர் அணியின் இறுதிப் போட்டி இந்தியா அணியுடன் நடைபெற்றது அதில் இலங்கை அணி வெள்ளி பதக்கத்தை வென்றது. மகளிர் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வெள்ளி பதக்கங்களை பெற்றுக் கொண்டது

அட்டியா பட்டியா என்பது கிளிதட்டு போட்டி போன்ற ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டு போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டு வெற்றி பெற்று இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்தமைக்கு வாழ்த்துக்கள்.

Wed, 02/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை