கல்முனை அல் -பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்க்கு (2019) தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (14) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல் கலந்து கொண்டதுடன், கெளரவ அதிதியாக பாடசாலை அதிபர் எம்.எஸ்.நபார் மற்றும் விசேட அதிதியாக பிரதி அதிபர்களான எம்.எஸ்.அலிகான்,எம்.ஏ.அஸ்தார் ஆகியோர் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பல்கலைக்கழகம், கல்வியியல் கல்லூரி ஆகியவற்றிற்கு தெரிவான மாணவர்களுக்கும் பதக்கம் அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.
இதன் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)
Tue, 02/18/2020 - 06:00
from tkn