அபேக்ஷா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இரத்த தானம்

கல்வி அமைச்சில் ஏற்பாடு

கல்வி அமைச்சின் ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அபேக்ஷா மருத்துமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக இரத்த தானம் வழங்கும் நிகழ்வு நேற்று (18) கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது அபேக்ஷா மருத்துவமனை நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்குவதற்கு நன்கொடைகளும் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அரசுக்கும் ஆசி வேண்டும் நோக்குடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வுக்கு பிரதமஅதிதியாக பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ வருகை தந்திருந்தார். கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும, கல்விச் சேவை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்திரானந்த உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Wed, 02/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை