வடக்கில் புதிய கூட்டணி; நேற்று ஒப்பந்தம் கைச்சாத்து

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் நான்கு கட்சிகள் இணைந்து உருவாக்கும் புதிய கூட்டணியான 'தமிழ் மக்கள் தேசிய கூட்டணி' யின் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய அணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வந்தன. இந் நிலையிலேயே தற்போது இப் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி மற்றும் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்தே இப் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

பருத்தித்துறை விசேட நிருபர்

Mon, 02/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை