இராஜகிரியவில் ஹெரோயினுடன் இருவர் கைது

இராஜகிரிய பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜகிரிய கொஸ்வத்த வீதியில் நெலும் பகுதிக்கு திரும்பும் சந்திக்கு அருகில் 02 கிலோ 257 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை முச்சக்கரவண்டி ஒன்றில் கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளுடன் ஹெரோயின் விற்பனை மூலம் சம்பாதித்த 40,120 ரூபா பணமும் முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்றிரவு (28) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இச்சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய கலபலுவாவ பகுதியிலுள்ள வீடொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது  ஒரு கிலோ 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை மற்றும் இராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்த 35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை இன்றையதினம் (29) புதுக்கடை இலக்கம் 04 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவை பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (PNB) மேற்கொண்டுள்ளனர்.
 
 
Sun, 03/29/2020 - 11:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை