வவுனியா செட்டிகுளத்தில் வீட்டுக்குள் நுழைந்து பெண்கள் மீது தாக்குதல்

வவுனியா, செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டிலிருந்த பெண்களை தாக்கியதுடன் அங்கிருந்த பொருட்களையும் முழுமையாக சேதப்படுத்தியுள்ளனர். இச் சம்பவம் நேற்று அதிகாலை 2.00மணியளவில் இடம்பெற்றது.

வீட்டிலிருந்த தாயும் மகளும் கடுமையாகத் தாக்கப்பட்டதால்,இவ்விருவரும் கடுங்காயங்களுக்குள்ளாகினர்.

இதில் ஒருவர், அயலவர்களின் உதவியுடன் செட்டிகுளம் பிரதேச பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவனை இழந்து தனது பிள்ளைகளுடன் தனிமையில் வசித்து வந்த இக்குடும்பப் பெண் பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா விசேட நிருபர்

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை