யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்பினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக நேற்றுக் காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பாலியல் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
'மகிழ்ச்சியான பல்கலைக்கழக வாழ்க்கையை மரணத்தில் முடிக்காதே, தற்கொலை சிந்தனையை தூண்டும் பகிடிவதை தேவைதானா, மனிதரை மனிதர் மதிப்பதே மனிதப் பண்பு, நாட்டிலும் வீட்டிலும் பெண்கள் சமத்துவத்தைப் பேணுவோம், பாலியல் கல்வி என்பது வாழ்க்கை பாடம் தயக்கத்தை விட்டு கற்றுக்கொள்வோம்' போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்களும் மகளிர் அமைப்புகளும் கலந்துகொண்டனர்.
பருத்தித்துறை விசேட நிருபர்
from tkn