கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை பூட்டு

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவை குப்பைமேட்டில் ஏற்பட்ட தீயிலிருந்து புகை பரவி வரும் நிலையிலேயே குறித்த வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

புகை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இவ்வாறு வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியின் கட்டுநாயக்க முதல் ஜா-எல வரையான பகுதி  வீதியே மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 

 

Thu, 02/20/2020 - 15:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை