சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் சபா இல்லம் சம்பியனாக தெரிவானது.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எல்.பதுர்தீன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிவப்பு நிறத்தில் போட்டியிட்ட சபா இல்லம் 376 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தையும், பச்சை நிறத்தில் போட்டியிட்ட மினா இல்லம் 303 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும் நீல நிறத்தில் போட்டியிட்ட அறபா இல்லம் 300 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளரும் நாவிதன்வெளி கோட்டக்கல்வி பணிப்பாளருமான திருமதி வீ.நிதர்சினி, சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.நஸீர், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்களான எம்.எம்.அப்துல் சத்தார், கே.எம்.எஸ்.நஜ்ஜாஸ், பிரதி அதிபர்களான ஏ.எம்.ஜெஸீம், எம்.எல்.ஏ.றாஸீக், எம்.ரீ.எம்.சத்தார், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சவளக்கடை குறூப் நிருபர்
from tkn