ஐ.பி.எல் ஆரம்பப் போட்டியில் மும்பை - சென்னை மோதல்

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 பருவம் மார்ச் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையில் முதல் போட்டி மார்ச் 29ஆம் திகதி நடைபெறுகிறது. இதில் நடப்புச் சம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இறுதிப்போட்டி மும்பையில் மே 24ஆம் திகதி நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், பெங்களுரு ரோயல் சலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் ஆகிய எட்டு அணிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 60 போட்டிகள் நடக்க உள்ளன.

இதில் மே மாதம் 17 ஆம் திகதி வரை லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டி நடைபெறும் 56 நாட்களில் 6 நாட்கள் மட்டுமே இருபோட்டிகள் ஒரே நாளில் நடைபெறவுள்ளன.

Mon, 02/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை