வென்டேஜ் எப்.ஏ கிண்ண இறுதிப் போட்டியில் பொலிஸ் - சோண்டர்ஸ்

வென்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் சோண்டர்ஸ் கழகம் தகுதி பெற்றன.

கொழும்பு, குதிரை பந்தய திடல் அரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகம், களுத்துரை புளு ஸ்டார் அணியை பெனால்டியில் 4–2 என வீழ்த்தியது. மற்றைய அரையிறுதியில் சோண்டர்ஸ் அணி 5–1 என்ற கோல் கணக்கில் புளு ஈகல்ஸ் அணியை தோற்கடித்தது.

முதலாவது அரையிறுதியில் சோண்டர்ஸ் அணி முழு ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் 2–1 என முன்னிலை பெற்ற அந்த அணி இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோல்களை புகுத்தியது. எனினும் புளு ஈகல்ஸ்் அணியில் இரு வீரர்கள் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆடிய பொலிஸ் மற்றும் புளு ஸ்டார் அணிகளுக்கு இடையிலான போட்டி கோலின்றின் முடிந்ததால் வெற்றியாளரை தேர்வுசெய்ய பெனால்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பொலிஸ் விளையாட்டுக் கழகம் பரபரப்பு வெற்றி ஒன்றை பெற்றது.

இதன்படி கடந்த முறை அரையிறுதியுடன் வெளியேறிய பொலிஸ் அணி, கடந்த முறை வென்டேஜ் எப்.ஏ கிண்ணத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தை இம்முறை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை