நடுவானில் விமானக் கதவை திறக்க முயன்றவருக்கு சிறை

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பிரிட்டன் நாட்டு பெண் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் லண்டன் ஸ்டான்ஸ்டட் விமானநிலையித்தில் இருந்து துருக்கியின் டெல்மானுக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது 26 வயதான சிலோ ஹெய்னஸ் என்ற பெண் விமானத்தின் கதவை திறக்க முயன்றதை அடுத்து விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகள் அவரை தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவத்தை அடுத்து பிரிட்டனின் இரு விமானப்படை விமானங்களின் உதவியோடு அந்த விமானம் ஸ்டான்ஸ்டட் விமானநிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு செல்ம்ஸ்போர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது ஹெய்னஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட நிலையிலேயே அவருக்கு தண்டை விதிக்கப்பட்டது.

மதுபானம் மற்றும் மருந்தை கலந்து குடித்ததால் அப்போது என்ன நடந்தது என்று உண்மையில் தமக்குத் தெரியவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 02/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை