எனக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை

கிளிநொச்சி வளாக பாலியல் துஷ்பிரயோகம்

யாழ்ப்பாண பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பகிடிவதை நடைபெற்றதாக வெளியான செய்திகள் தொடர்பில் எனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதைகள் நடைபெற்றமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதில் சில தடங்கள் உள்ளன.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் ஒருவர் முறைப்பாடு செய்தால் , அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

பாதிக்கப்பட்ட தரப்பு தைரியமாக முன்வந்து முறைப்பாடு செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கினால் குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என்றார்.

யாழ். விசேட நிருபர்

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை