பயணிகளை இறக்கிய பஸ் மீது மற்றொரு பஸ் மோதி விபத்து; ஒருவர் பலி

பயணிகளை இறக்கிய பஸ் மீது மற்றொரு பஸ் மோதி விபத்து; ஒருவர் பலி-Accident-Thambalagamam-One-Dead

பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றின் மீது தனியார் பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம்  இன்று (06) அதிகாலை 5.00 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த  இ.போ.ச. பஸ் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 99ஆம் கட்டைப் பகுதியில் நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பஸ் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் தனியார் பஸ்ஸின் உதவியாளர்  உயிரிழந்துள்ளதாகவும், சாரதி படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

இதுவரை விபத்தில் காயமடைந்தவர்களை கந்தளாய் மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இது தொடர்பிலான விபரங்களை திரட்டி வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் குறிப்பிட்டனர். 

விபத்து தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)

Thu, 02/06/2020 - 09:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை