உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளிச்சாக்குளம் பிரதேசத்திலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் இருந்து ஒரு தொகை நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய நேற்று முன்தினம் (08) பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது கூடு ஒன்றில் வளர்த்து வந்த 85 நட்சத்திர ஆமைகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதில் சிறிய ஆமைகளுடன் பெரிய ஆமைகளும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்
இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று முன்தினம் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபர் நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஆமைகள் உடப்பு பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உடப்பு குறூப் நிருபர்
from tkn