பாண் விலை இன்று முதல் 5 ரூபாவால் குறைப்பு

 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் குறைக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற பேக்கரி உரிமையாளர் சங்க விசேட கூட்டத்திலே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கமைய பாண் உட்பட பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும். அரசாங்கம் வழங்கிய வரி நிவாரணத்தின் பயனை மக்களுக்கு வழங்கும் வகையில் பாணின் விலையை குறைப்பதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.

Wed, 02/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை