ஜோன் டீ பிறிற்றோ விளையாட்டு கழகத்தின் 45ஆவது ஆண்டு விழா

பெரியகல்லாறு ஜோன் டீ பிறிற்றோ விளையாட்டுக்கழகத்தின் 45ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை(9)பிற்பகல் 3.00 மணியளவில் ஜோன் டீ பிறிற்றோ விளையாட்டுக்கழகத்தின் தலைவர் தேவராசா சிந்துஜன் தலைமையில் பெரியகல்லாறு அருளாந்தர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சரும்,தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாகவும்,முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி,ஐக்கிய தேசியகட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்பிரிவுகளுக்கான தலைவர் ரீ.கங்காதரன்,பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கணேசநாதன்,பெரியகல்லாறு மண்ணின் பிரபல சட்டத்தரணி திருமதி.ஜெசிந்தா ராஜேந்திரன், ஈஸ்டன் லங்கா கம்பனியின் உரிமையாளரும் அரச ஒப்பந்தகாரருமான ஜோன்பிள்ளை பிரசன்னாபிள்ளை ஆகியோர்கள் சிறப்பு அதிதிகளாகவும், மற்றும் மதத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.

இதன்போது அதிதிகளை மாலை அணிவித்து வரவேற்றதுடன்,புனித அருளாந்தர் வளாகத்தில் மரநடுகை,தேசியகொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டது.ஒளிச்சுடரேற்றல்,சத்தியப்பிரமாணம் செய்தல்,புலமைப்பரீட்சை சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து சான்றீதழ்கள்,வெற்றிக்கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்,பெரியகல்லாற்றில் ஜோன் டீ பீற்றோ விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து சமூகசேவை செய்தவர்களை இனங்கண்டு பாராட்டியும்,பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்கள்.

(வெல்லாவெளி தினகரன் நிருபர்)

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை