40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி சமநிலையில்

புத்தளம் வெட்டரன்ஸ் கால்பந்தாட்ட அணிக்கும், கொழும்பு வெட்டரன்ஸ் கால்பந்தாட்ட அணிக்குமிடையில் நடைபெற்ற 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சிநேகபூர்வமான கால்பந்தாட்ட போட்டியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலினை பெற்றதால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை (23) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

தத்தமது லீக் அணிகளுக்காக பல்வேறு திறமைகளை வெளிக்காட்டி பல சாதனைகளை நிலை நாட்டிய முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் பலரும் இந்த 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் பங்கேற்றனர். இடைவேளைக்கு முன்னதாக கொழும்பு வெட்டரன்ஸ் கால்பந்தாட்ட அணிக்கு கிடைக்கபெற்ற பெனால்டி உதையினை அவ் அணி வீரர்கள் கோலாக்கினர்.

இடைவேளைக்கு பின்னர் புத்தளம் வெட்டரன்ஸ் கால்பந்தாட்ட அணியின் முன்கள வீரரும், புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் உடற்கல்வி போதனாசிரியருமான எம்.எப்.எம்.ஹுமாயூன் செலுத்திய சிறந்த உதையொன்று கோல் ஆகியதால் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொண்டன.

போட்டிக்கு நடுவர்களாக ஏ.ஏ.எம்.கியாஸ், எம்.எம்.சிபான், எம்.ஐ.எம்.அலி ஆகியோர் கடமையாற்றினர்.

 புத்தளம் தினகரன் நிருபர் 

 

Thu, 02/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை