பிரார்த்தனை கூட்ட நெரிசலில் தன்சானியாவில் 20 பேர் பலி

வடக்கு தன்சானியாவில் மைதானம் ஒன்றில் இடம்பெற்ற தேவாலய ஆராதனை ஒன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 20 பேர் உயிரிழந்ததோடு மேலும் பலர் காயமடைந்தனர்.

மோசி நகரில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த ஆராதனைக்கு மைதானம் எங்கும் மக்கள் திரண்டிருந்ததோடு அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்ட எண்ணெய்யை பெறுவதற்கு முண்டியடித்தபோதே நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஐந்து சிறுவர்களும் இருப்பதாக மோசி மாவட்ட ஆணையாளர் கிப்பி வொரிபா குறிப்பிட்டுள்ளார். கூடியிருந்த மக்களின் அளவு மற்றும் இரவு நேரத்தில் நெரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வறுமையை இல்லாமல் செய்வது மற்றும் அற்புதத்தில் நோய்களை குணப்படுத்துவது போன்ற வாக்குறுதிகள் கொண்ட பிரார்த்தனை கூட்டங்கள் தன்சானியாவில் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளது.

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை