இ.போ.ச பஸ் - சொகுசு பஸ் விபத்தில் நடத்துநர் பலி; 20 பேர் காயம்

திருகோணமலை தம்பலகாமம் 99 ௧ட்டை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் சொகுசு பேருந்தும் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இச் சம்பவம்அதிகாலை 04.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன் தனியார் பஸ் நடத்துனரான பதுளை நந்தபொலயைச் சேர்ந்த துசான் மதுசங்க என்பவரே அதே இடத்தில் மரணமடைந்தார்.

ஏ-6 வீதியில் கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற திருமலை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் கொழும்பிலிருந்து திருகோண மலை நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்துமே விபத்துக்குள்ளாகியிருந்தன.

திருகோணமலை நோக்கி பயணித்த போக்குவரத்துச் சபை பேருந்து தம்பலகாமம் 99ஆம் கட்டை மீரா மக்காம் பள்ளிக்கு அறுகாமையில் நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டிருந்த போதே பின் பக்கமாக வந்த தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். பேருந்தில் வந்த அனைவரும் காயங்களுக்குள்ளாகி தம்பலகாமம்,கந்தளாய்.திருகோணமலை வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவரின் சடலம் தம்பலகாமம் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரனையினை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரொட்டவெவ குறூப், கந்தளாய் தினகரன், முள்ளிப்பொத்தானை குறூப் கிண்ணியா தினகரன்,நிருபர்கள்

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை