அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் 2020/2022 ஆண்டிற்கான புதிய நிருவாகசபை

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் புதிய நிவாக சபையை தெரிவு செய்வற்கான ஒன்றுகூடல் லீக்கின் முன்னாள் தலைவரும் சட்டத்தரணியுமான கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.சட்டத்தரணி தலைமையில் அண்மையில் மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டீ சில்வா பார்வையாளராகவும் கண்கணிப்பாளராகவும் கலந்து கொண்டார். இந்த ஒன்றுகூடலில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் என இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பெயர் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக் என ஏகமானதாக மாற்றம் செய்யப்பட்டதுடன் இதில் பின்வருவோர் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் 2020/2022 ஆண்டிற்குரிய புதிய நிருவாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் வை.கே.ரஹ்மான் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மனாப் பொது செயலாளராகவும், எஸ்.எம்.கான் பொருளாளராகவும், பிரதி தலைவர்களாக எம்.பி.எம்.ரஸீட், எம்.எல்.றபீக், அலியார் பைஸர், என்.எம்.ஜெலீல், மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி, அப்பாஸ் எம்.நியாஸ் ஆகியோரும் எஸ்.ரி.எம்.பஸ்வாக் உதவி செயலாளராகவும் ஏ.எச்.எம்.பாரிஸ் உதவிப் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

பெரியநீலாவணை விசேட நிருபர்

Sat, 02/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை