1,62,63,889 பேர் பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதி

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை நேற்று உத்தியோகபூர்வமாக தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது. இதன்படி ஒரு கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 889வாக்காளர்கள் (1,62,63,889) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த வருடத்தில் (2020) நடைபெறக்கூடிய தேர்தல்களில், 2019ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்பின்படியே வாக்களிப்பு இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழுவின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் பிரிவுப் பணிப்பாளர் சன்ன பீ.டி. சில்வா தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கையை விடவும் 2019 புதிய வாக்காளர்களது எண்ணிக்கை 2,71,789 ஆல் அதிகரித்துள்ளது. இளம் வாக்காளர்களான இவர்கள் இம்முறை முதற் தடவையாக வாக்களிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எம்.ஏ.எம். நிலாம்

Thu, 02/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை