12 சந்தேக நபர்களுக்கும் மீண்டும் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்பு டைய சந்தேகத்தின்பேரில் கைதான 12 பேரை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. இவர்கள், காத்தான்குடி,கல்முனை,சாய்ந்தமருது ,சம்மாந்துறை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.கல்முனை நீதிமன்றநீதிவான்ஐ.என்.றிஸ்வான்முன்னிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே,

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு கைதான இவர்கள், சட்ட மாஅதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மீண்டும் இவர்கள் விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை விடுதலை செய்வதற்கு பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்ததால்,இவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு,வழக்குவிசாரணைகள் மார்ச் (02) வரை ஒத்திவைக்கப்பட்டது.கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இவர்கள் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

பாறுக் ஷிஹான்

Tue, 02/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை