பாகிஸ்தானில் விஷ வாயு கசிவு: 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்குப் பகுதி நகரான கராச்சியில் விஷ வாயு கசிந்ததில் 11 பேர் பலியாகினர். அதிகமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கராச்சியின் கீமாரி பகுதியில் வசித்துவந்த பொதுமக்கள் திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறி மருத்துவமனைகளுக்கு விரைந்தனர். 650க்கும் அதிகாமானவர்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விஷ வாயுக் கசிவு ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேர் பலியானதாகவும், அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இது குறித்து விசாரித்து வரும் கராச்சி பொலிஸார் விஷ வாயுக் கசிவு குறித்து ஒரு துப்பும் துலங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

துறைமுகத்திற்கு வந்து இறங்கிய கப்பல் கொள்கலன்களில் விஷ வாயு கசிகிறதா என்பதையும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். எனினும் இந்த வாயுவின் தன்மை என்னவென்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Wed, 02/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை