அத்துமீறி மீன்பிடித்த 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 11 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

வடக்கின் தீவு பகுதியொன்றில் ரோலர் படகொன்றில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவர்களை தடு க்கும் வகையில் கடற்படையினர் முன்னெடுத்துவரும் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒருகட்டமாக வடக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப் பட்டனர்.

Mon, 02/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை