ஹோட்டலில் கொதிநீர் புகுந்து ஐவர் உயிரிழப்பு

ரஷ்ய ஹோட்டல் ஒன்றில் கொதிநீர் வெள்ளம் போன்று புகுந்த விபத்தில், 5 பேர் தீக்காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய நாட்டின் பேர்ம் நகரில் அமைந்துள்ள கெரமல் ஹோட்டலில் அமைக்கப்பட்டிருந்த கொதிநீர் குழாய் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்துள்ளது. இதனால் அந்த ஹோட்டல் அறைகளுக்குள் கொதிக்கும் தண்ணீர் உள்நுழைந்தது.

மழை வெள்ளம் போன்று புகுந்த கொதிநீர் வெள்ளத்தில் சிக்கி ஹோட்டலுக்குள் இருந்த 5 பேர் படுகாயமடைந்து பலியாகினர். மேலும் 3 பேர் தீக்காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத சேவைகளை வழங்கியதாக கூறி பொலிஸார் குற்றவழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை