சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது

சிவனொளிபாத மலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நேற்றிரவு (24) குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 18, 20, 23, 33, 37, 51 ஆகிய வயதுகளையுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Sat, 01/25/2020 - 11:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை