பும்ராவின் யோக்கரை கண்டு வியந்தேன்

டேவிட் வோர்னர்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்பிரித் பும்ராவின் பவுன்சர் மற்றும் யோக்கர் பந்து வீச்சுகளை கண்டு வியப்படைந்ததாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வோர்னர் கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதையடுத்து, களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வோர்னர் இந்தியாவின் பந்து வீச்சை சிதறடித்தனர். இருவருமே சிறப்பாக விளையாடி சதமடித்தனர். இறுதியில் 39 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இப் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் பவுன்சர் மற்றும் யோக்கர் பந்து வீச்சுகளை கண்டு வியந்தேன் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

‘அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீயைப் போன்று பவுண்டரி லைனில் இருந்து ஓடிவந்து 150கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒருவரை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. பும்ராவிடம் அதீத திறமை உள்ளது. பும்ராவின் யோர்க்கரும், பவுன்சரும் என்னை வியக்க வைத்தது. நீங்கள் ஒரு யோக்கர் அல்லது ஒரு பவுன்சரை சந்திக்கப் போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை எப்படி விளையாடப் போகிறீர்கள், என்பதுதான் தனித்துவமானது’ என டேவிட் வோர்னர் கூறியுள்ளார்.

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை