முஸ்லிம் மஜ்லிஸ் பொதுக்கூட்டமும் நிர்வாகிகள் தெரிவும்

லேக்ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிம் வருடாந்தப் பொதுக் கூட்டம் லேக்ஹவுஸில் நடைபெற்றது.இதன் போது புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது. புதிய தலைவராக தினகரன் பிராந்திய செய்தி ஆசிரியர் எம்.எஸ்.பாஹிம் தெரிவானதோடு செயலாளராக சிரேஷ்ட கணினி இயக்குநர் எம்.என்.எம்.றிஸ்வானும் பொருளாளராக சந்தைப்படுத்தும் அதிகாரி எம்.ஜ.நிஸாம்தீனும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

ஆலோசகர்களாக தினகரன் ஆலோசகர் எம்.ஏ.எம்.நிலாம்.தினகரன் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். இது தவிர உப தலைவர்களாக எம்.ஆர்.எம். மஹ்ரூப்,எம்.எம். பிர்தௌவ்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டதோடு உபசெயலாளராக எஸ்.எம்.றிஸ்வானும் உபபொருளாளராக எம்.எஸ்.எம்.ஹில்மியும் தெரிவானார்கள். நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக எம்.எச்.எம்.நளீம்,எம்.என்.எம்.ரிம்ஸான்,

எம்.எம்.எம்.பைசால், ஏ.ஆர்.பரீத்,எம்.ஏ.எம்.பஸான்,அஜ்வாத் பாஸி,எம்.யூ.எம்.றிஸ்மி,எம்.எம்.எம்.றிஸ்வி,ஸாதிக் ஷிஹான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.இதில் கலந்து கொண்ட அங்கத்தவர்களையும் மஜ்லிஸ் முன்னாள் நிர்வாகிகளையும் புதிய நிர்வாகிகளையும் படங்களில் காணலாம். படம்: விபுல அமரசிங்ஹ

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை