போல்டன் உதைபந்தாட்ட கழக தலைவராக ஹிசாம்

புத்தளம் போல்டன் உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராக மூன்றாவது தடவையாகவும் பீ. எம். ஹிசாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புத்தளத்தில் அமைந்துள்ள சிம்கோ கட்டிடத் தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற அடுத்த இரண்டு வருடத்திற்கான புதிய செயற்குழுவைத் தெரிவு செய்வதற்கான கூட்டத்தின் போதே இவ்வாறு இவர் போல்டன் உதைப்பந்தாட்டக் கழகத்தின் தலைவராக ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது கழகத்தின் செயலாளராக முஹம்மட் ஜௌசி ஜெதா முஹம்மட்டும், பொருளாளராக ஆர். எம். பஸீல் ஹக் ஆகியோருடன் உப தலைவர்களாக பிரிஸ்லி மற்றும் நிஸ்வர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பீ. எம். ஹிசாம் புத்தளம் பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

 (புத்தளம் விஷேட நிருபர்)

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை