மூதூர் அஸ்ரப் வித்தியாலயத்தில் தேசிய போட்டிக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு

2019 இல் நடாத்தப்பட்ட சிறுவர் மெய்வல்லுநர் குழு விளையாட்டுப் போட்டியில் மூதூர் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அஸ்ரப் வித்தியாலயத்தில் இருந்து வலயம் மற்றும் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறும் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (14) அஸ்ரப் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.எச்.எம். றியால் தலைமையில் இடம்பெற்றது.

மூதூர் கல்வி வலயத்தில் புலமைப்பரிசில் பெறுபேறு, இணைப்பாடவிதான செயற்பாடு மற்றும் விளையாட்டுக்களிலும் முன்னணியில் திகழும் இப்பாடசாலையின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எஸ்.எச். தமீம் மேற்கொண்ட அயராத பயிற்றுவிப்பின் மூலம் இம்மாணவர்கள் தேசிய மட்டம் வரை தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு மூதூர் வலயக்கல்வி அலுவலகம், பாடசாலை அபிவிருத்திக்குழு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பாராட்டி உள்ளனர்.

(மூதூர் தினகரன் நிருபர்)

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை