ரஞ்சனின் செயலை கண்டிக்கும் தைரியம் ஐ.தே.கவுக்கு இல்லை

அரசியல் நிகழ்ச்சி நிரலை முறையாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒருவரை அரசியல் கட்சிகள் வேட்பாளராக நிறுத்த வேண்டிய அதேநேரம் பொதுமக்களும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவைப் போன்றவர்களை தேர்ந்தெடுப்பதை எதிர்வரும் தேர்தலில் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கேட்டுக் கொண்டார்.

அரசாங்க செய்தியாளர் மாநாடு நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றது.

இதன்போதே இராஜாங்க அமைச்சர், தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொண்டவர்களையன்றி நாட்டுக்கு மிகப் பொருத்தமான பிரதிநிதிகளே தேர்தலில் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு மற்றும் அவரது பாராளுமன்ற உரை ஆகியன தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.

Fri, 01/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை