மூன்று ஆண்டுகளின் பின் கிண்ணம் வென்றார் செரீனா

அவுஸ்திரேலியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம் மூன்று ஆண்டுகளின் பின் முதல் முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஒப்லாந்து கிளாசிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய செரீனா வில்லியம்ஸ் இறுதிப் போட்டியில் ஜெசிகா பெகுலாவை 6–3, 6–4 என தோற்கடித்து கிண்ணத்தை வென்றார். இதில் கிடைத்த பரிசுத் தொகையை அவர் அவுஸ்திரேலிய காட்டுத் தீ நிவாரணத்திற்கு வழங்கினார்.

இதற்கு முன்னர் அவர் 2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து கர்ப்பமுற்றிருந்த அவர் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகினார். குழந்தை பெற்ற பின் தீவிர பயிற்சிகளின் பின் டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்பியபோதும் அவரால் சம்பியன் கிண்ணம் ஒன்றை வெல்ல முடியமால் இருந்தது. எனினும் முக்கிய சில போட்டிகளில் இறுதிப் போட்டிவரை முன்னேறினார்.

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை