பிரதேச ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கும், மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவை முறையாகப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி பொறிமுறையொன்றைக் கொண்டு வருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளை, பாராளுமன்றத்திலுள்ள பிரதமரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்ள பாராளுமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மாத்தளை மாவட்ட ஊடகவியலாளர் குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது பிரதேசங்களில் பரந்துபட்டுள்ள ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இடையூறுகள் பற்றி பிரதமருக்கு எடுத்துரைத்தனர்.

பிரச்சினைகளைத் தீர்க்க தலையிடுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், பிரதேச ரீதியில் ஊடகத்தொழிலில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது பற்றி கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.

Fri, 01/24/2020 - 10:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை