வவுனியாவில் டொல்பின் ரக வாகனம் குளத்திற்குள் பாய்ந்து விபத்து

கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குச் சென்று மீண்டும் முல்லைத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் ரக வாகனமொன்று வவுனியா கல்குண்டாமடு பகுதியிலுள்ள குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று முன்தினம் (31) இரவு விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட வாகனம் நேற்று (01) அதிகாலையே விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ் விபத்தினால் வாகனத்தில் பயணித்த 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக தெரிய வருகையில்,

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி அதி வேகமாக சென்றுகொண்டிருந்த ஹைஹேஸ் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வவுனியா, ஏ9 வீதியில் உள்ள கல்குண்டாமடு குளத்தினுள் பாய்ந்து மூழ்கியுள்ளது.

வாகனத்தில் பயணித்தவர்கள் விரைவாக செயற்பட்டு வானிலிருந்து கீழே இறங்கியமையால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இவ் விபத்து தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

வவுனியா விசேட நிருபர்

Thu, 01/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை