வல்லப்பட்டைகளுடன் இருவர் கைது

மாந்தை சன்னார் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் நேற்று முன்தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடற்படையினர் வழங்கிய தகவலுக்கமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கமைவாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் கங்காபதி ஆர்த்தனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவர்களை கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான 70 கிலோ வல்லப்பட்டையினை மீட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மன்னார் குறூப் நிருபர்

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை