வீசா காலாவதியான சவுதி அரேபிய பிரஜை கைது

வீசா காலாவதியான நிலையில் நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த சவுதி அரேபிய பிரஜை ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று (21) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குடிவரவு, குடியகல்வு சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை இன்று (22) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Wed, 01/22/2020 - 09:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை