காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லடி பகுதியில் நேற்று மாலை (03) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவர் செலுத்திய கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதனால் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றதுடன் இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமிருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
மட்டக்களப்பு ஊறணி பகுதியில் உறவினர் வீட்டில் இருந்து ஆரையம்பதி நோக்கி சென்ற கார் தனது கட்டுடைப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 72 வயதான முதியர் ஒருவர் தனது ஊரான அரசடித்தீவுக்கு செல்வதற்கு பஸ்ஸிற்காக நின்றவேளை இதில் பலியாகியுள்ளார்.
காத்தான்குடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(பாறுக் ஷிஹான்)
from tkn