பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்ைக

கிழக்கில் கொரோனோ வைரஸ்

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாமல் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்மஹ்ரூப், கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

தற்போது சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு பலர் மரணமடைந்தும், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இவ்வைரஸானது தென்கிழக்காசிய நாடுகள்,ஆசிய நாடுகள் என்பவற்றுக்கும் பரவிவருகின்றது. இந்நிலையில் எமது நாட்டிலும் முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். இங்கு சுற்றுலா வந்த சுற்றுலாப்பயணியே அடையாளம் காணப்பட்டவராவார்.

சுற்றுலாத்துறைக்கு கிழக்கு மாகாணம் பிரபல்யம் பெற்ற பிரதேசமாகும். முக்கியமாக திருகோணமலையில் நிலாவெளி, மட்டக்களப்பில் பாசிக்குடா, அம்பாறையில் அறுகம்பே என்பன புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்களாகும். இதேபோன்று திருகோணமலை மாவட்டத்திலுள்ள துறைமுகத்திற்கு வெளிநாட்டு கப்பல்களும் வருகின்றன.

மேலும் பிரீமா மா ஆலையில் சீனாவைச் சேர்ந்தோர் கடமை புரிவதையும் கருத்திற்கொண்டு, கொரோனா வைரஸ் தொற்றாமல் இருப்பதைத் தடுப்பதற்கு ஏதுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்குமாறு அவர் ஆளுநரைக் கேட்டுள்ளார்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை