உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் கழகம் வெற்றி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் அகில இலங்கை ரீதியாக நடாத்தும் பிரிமியர் லீக் டிவிசன் -2 சம்பியன் - 2019 வெற்றிக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஒரு அங்கமான போட்டி கடந்த 2019-12-29 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மட்டு நகர் வெபர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.இதில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் தன்னை எதிர்த்தாடிய மட்டுநகர் டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தினை (04-02) கோல்கள் அடிப்படையில் வெற்றி கொண்டு அகில இலங்கை ரீதியான 12 அணிகளைக் கொண்ட சுப்பர் சுற்றுக்குள் உள்வாங்கப்பட்டது.

போட்டி ஆரம்பித்து விறுவிறுப்பான நிலையில் ஒலிம்பிக் அணியினர் முன்பாதி வேளையில் (2-1) என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தனர். மீண்டும் ஆரம்பித்த பின் பாதிவேளையில் ஒலிம்பிக் அணியினரின் விளையாட்டு மேலோங்க இறுதியில் (4-2) எனும் கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றனர். ஒலிம்பிக் சார்பில் முன்னணிவீரர்களான ஹனான், ஜாவித் ஆகியோர் தலா இரண்டுகோல்களைப் போட்டனர். போட்டியின் போது பதுளை மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்க உறுப்பினர்கள் மத்தியஸ்தர்களாகக் கடமையாற்றினர். இம்மாத நடுப்பகுதியில் சுப்பர் சுற்றுக்கள் இடம்பெற இருக்கின்றன.

கல்முனை சுழற்சி நிருபர்

Sat, 01/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை