கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மிரிஹானவில் சம்பவம்

மிரிஹான, நாவின்ன பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரவித்தனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (21) இடம்பெற்ற இச்சம்பவத்தில் நாவின்ன பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரைக் கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Wed, 01/22/2020 - 09:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை