ஈராக் போராளிகள் பழிதீர்க்க உறுதி

அமெரிக்க வான் தாக்குதலில் ஈராக்கின் பலம்மிக்க போராட்டக் குழுவின் தலைவர் அபூ மஹ்தி அல் முஹன்திஸ் கொல்லப்பட்டதற்கு ஈராக்கியர்கள் பழிதீர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஈரான் ஆதரவு கொண்ட ஷியா போராட்டக் குழுவின் தலைவர் கைஸ் அல் கஸ்ஸாலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“உயிர்த்தியாக தளபதி சுலைமானியின் படுகொலைக்கு ஈரானின் முதல் கட்ட பதில் நடவடிக்கை நிகழ்ந்துள்ளது” என்று ட்விட்டரில் குறிப்பிட்ட அவர், “படுகொலை செய்யப்பட்ட தியாக தளபதி முஹன்திஸின் படுகெலைக்கு முதல்கட்ட பதில் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டி நேரம் இது” என்றார்.

ஈரான் குத்ஸ் படைத் தளபதி சுலைமானியுடன் கொல்லப்பட்ட முஹன்திஸ் ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக்கிய சியா போராட்டக் குழுவின் தலைவராவார்.

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை