துருக்கியில் படகு கவிழ்ந்து எட்டு சிறுவர்கள் உயிரிழப்பு

துருக்கியின் மேற்குக் கடலில் படகு கவிழ்ந்து எட்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கிரேக்க தீவான சியோசுக்கு எதிராக சுற்றுலாத் தலமான சிஸ்மேவுக்கு அப்பாலுள்ள கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்தில் எட்டு பேர் உயிருடன் காப்பற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை.

ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் குடியேறிகளின் பிரதான இடைமாற்று இடமாக துருக்கி உள்ளது.

கடலில் இருந்து கூச்சல் சத்தம் கேட்டதை அடுத்து அங்கு விரைந்ததாக துருக்கி கடலோரக் காவல் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சிறிய மற்றும் அளவுக்கு அதிகமானோரை ஏற்றிய படகுகள் மத்தியதரைக் கடலை கடக்கும் முயற்சியில் அண்மைய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் குறியேறிகள் உயிரிழந்துள்ளனர்.

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை